அன்பு கரங்கள் நிதி ஆதரவு திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மிகவும் வறுமை நிலையில் உள்ள குடும்பங்களின் தங்கள் இரண்டு பெற்றோர்களையும் இழந்த,தங்களது உறவினர்களின் பாதுகாப்பில் குழந்தைகள் வளர்ந்து வருவதை அறிந்து குழந்தைகளை,அரவணைத்து தொடர்ந்து பாதுகாத்திடும் வகையில் அவர்களின் பள்ளி படிப்பு வரை இடை நிற்றல் இன்றி,அவர்கள் கல்வியை தொடர. 18 வயது வரை மாதம் 2000 ரூபாய் உதவித்தொகை வழங்குவதோடு மட்டுமல்லாமல் பள்ளிப் படிப்பு முடித்தவுடன் கல்லூரி கல்வி மற்றும் உரிய திறன் மேம்பாட்டு பயிற்சிகளும் அவர்களுக்கு வழங்கிட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவித்தார்கள். இந்த அறிவிப்பின்படி இரண்டு பெற்றோர்களையும் இழந்து தங்களது உறவினர்களின் பாதுகாப்பில் வளர்ந்து வரும் குழந்தைகள் மற்றும் ஒரு பெற்றோரில் இருந்து மற்றொரு பெற்றோரால் பராமரிக்க இயலாத குழந்தைகளுக்கு அவர்களின் 18 வயது வரை மாதாந்திர உதவித் தொகை அன்புக்கரங்கள் நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசால் வழங்கப்படும்.




